அ.ம.மு.க. 5-ம் ஆண்டு தொடக்க விழா கொண்டாட்டம் : அ.ம.மு.க. கொடியேற்றி வைத்து பொதுமக்களுக்கு அன்னதானம்
Aug 1 2022 4:54PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அம்மா மக்கள் முன்னேற்ற கழக 5-ம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு சென்னையில் கழகக்கொடியேற்றி வைக்கப்பட்டு அன்னதானம் வழங்கப்பட்டது.
தென்சென்னை வடக்கு மாவட்ட அ.ம.மு.க. சார்பில் எம்.ஜி.ஆர் நகரில் உள்ள டாக்டர் கானு நகர் பகுதியில், அ.ம.மு.க. துணைப் பொதுச் செயலாளர் திரு.G.செந்தமிழன் கழகக் கொடியை ஏற்றி வைத்தார். சென்னை வடக்கு மாவட்ட 137-வது வட்ட கழகச் செயலாளர் திரு.S.திருநாவுக்கரசு, தென்சென்னை வடக்கு மாவட்டச் செயலாளர் திரு.K.விதுபாலன், தென்சென்னை வடக்கு மாவட்டக் கழக நிர்வாகிகள் திரு.பொன் பாஸ்கரன், திரு.M.R சரவணன், சண்முகவள்ளி, பகுதிக் கழகச் செயலாளர் திரு.குணசீலன், திரு.விமல், திரு.சதீஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர். பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
தென்சென்னை வடக்கு மாவட்ட அ.ம.மு.க. சார்பில் எம்.ஜி.ஆர் நகரில் உள்ள எம்.ஜி.ஆர். சிலை அருகே, அ.ம.மு.க கொடியை கழக துணைப் பொதுச் செயலாளர் திரு.G.செந்தமிழன் ஏற்றி வைத்தார். தென்சென்னை வடக்கு மாவட்டச் செயலாளர் திரு.விதுபாலன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.