தேனியில், மாவட்ட ஆட்சியரிடம் நூதன முறையில் புகார் மனுக்களை வழங்கிய சிவசேனா கட்சியினர்
Sep 14 2022 10:16AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி மனுக்களை கூடையில் வைத்து தலையில் சுமந்து வந்து சிவசேனா கட்சி சார்பாக தேனி ஆட்சியரிடம் நூதன முறையில் புகார் மனுக்களை வழங்கினர். ஏற்கெனவே அளிக்கப்பட்ட புகார் மனுக்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்து புகார் மனுக்களையும் கூடையில் வைத்து தலையில் சுமந்து நூதன முறையில் வந்து புகார் மனுக்களை ஆட்சியர் முரளிதரனிடம் வழங்கினர்.