திருச்சியில் நடைபெற்ற என்.சி.சி. மாணவர்களுக்கான துப்பாக்கி சுடும் போட்டியில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் பங்கேற்பு
Jun 25 2013 12:35PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருச்சியில் நடைபெற்ற என்.சி.சி. மாணவர்களுக்கான துப்பாக்கி சுடும் போட்டியில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான மாணவ-மாணவியர் கலந்துகொண்டு தங்களது திறமையை வெளிப்படுத்தினர்.
தமிழ்நாடு தேசிய மாணவர் படை சார்பில், திருச்சி காஜா மலை மைதானம் மற்றும் புத்தனாம்பட்டி நேரு நினைவுக் கல்லூரியில் பயிற்சி முகாம் நடைபெறுகிறது. இந்தப் பயிற்சி முகாமில் திருச்சி, மதுரை, கரூர், பெரம்பலூர் உட்பட பல்வேறு மாவட்டங்களி லிருந்தும் பள்ளி மற்றும் கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ - மாணவிகள் 500 பேர் கலந்து கொண்டனர். இந்த முகாமையொட்டி, மாணவ - மாணவிகளுக்கு துப்பாக்கி சுடும் போட்டி நடைபெற்றது. இதில் மாணவர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு தொலைவில் உள்ள இலக்கினை நேர்த்தியாக துப்பாக்கியால் சுட்டு தங்களது திறமையை வெளிப்படுத்தினர்.