2019-ம் ஆண்டுக்கான ஐ.சி.சி விருதுகள் அறிவிப்பு - ஒருநாள் மற்றும் டெஸ்ட் கனவு அணியின் கேப்டனாக, விராத் கோலி தேர்வு
Jan 15 2020 5:14PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் சார்பில், 2019-ம் ஆண்டுக்கான சிறந்த ஒருநாள் போட்டி வீரருக்கு, ரோகித் சர்மாவும், சிறந்த ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணி கேப்டனாக, விராத் கோலியும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் சார்பில், கடந்த 2019-ம் ஆண்டில் சிறந்து விளங்கியவர்களுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்களை சேர்த்த இந்திய அணியின் துணைக் கேப்டன் ரோகித் சர்மா, ஒருநாள் போட்டியின் சிறந்த வீரராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர், கடந்தாண்டு 7 சதங்களை விளாசியுள்ளார். இதே போல், 2019ம் ஆண்டின் ஐ.சி.சி.,யின் ஒருநாள் மற்றும் டெஸ்ட் கனவு அணியின் கேப்டனாக, கேப்டன் விராத் கோலி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
மேலும், இந்தியாவுக்கு எதிரான போட்டியில், ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித்தை ரசிகர்கள் கேலி செய்த போது, அவருக்கு ஆதரவு தர வேண்டும் என்று, விராட் கோலி சைகை காண்பித்தார். இதற்காக, 'ஸ்பிரிட் ஆப் கிரிக்கெட்' விருதுக்கு விராட் கோலி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். வங்க தேசத்திற்கு எதிரான டி-20 போட்டியில், 7 ரன்கள் மட்டுமே கொடுத்து 6 விக்கெட் வீழ்த்திய இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹர், டி20 கிரிக்கெட் போட்டியின், சிறந்த பவுலராக தேர்வாகி உள்ளார்.