ஆஸ்திரேலியா அணியுடனான 2-வது ஒருநாள் போட்டி : காயம் காரணமாக ரிஷப் பந்த் விலகல்
Jan 16 2020 1:02PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இருந்து, இந்திய அணியின் வீக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் விலகியுள்ளார். மஹாராஷ்டிர மாநிலம் மும்பையில், கடந்த 14-ம் தேதி நடைபெற்ற முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் போது, ரிஷப் பந்த் காயமடைந்தார். இந்நிலையில், இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இருந்து அவர் விலகி உள்ளார். எனினும், அவருக்கான மாற்று வீரர் அறிவிக்கப்படவில்லை. ரிஷப் பந்தின் உடற்தகுதியை கருத்தில் வைத்து, மூன்றாவது போட்டியில் விளையாடுவாரா என்பது தெரிய வரும்.