இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி : இரு அணிகளும் பலப்பரீட்சை
Jan 17 2020 9:50AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான, 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி, ராஜ்கோட்டில் இன்று நடைபெறுகிறது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலியா அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. மும்பையில் நடந்த முதல் போட்டியில் ஆஸ்திரேலியா 10 விக்கெட் வித்தியாசத்தில் அபாரா வெற்றி பெற்று, தொடரில் 1-பூஜ்ஜியம் என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில், 2-வது ஒருநாள் போட்டி, குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் இன்று பிற்பகல் 1.30 மணி அளவில் நடைபெற உள்ளது. தொடரை வெல்லும் முனைப்பில் ஆஸ்திரேலியாவும், வெற்றியை பதிவு செய்யும் நோக்கில் இந்தியாவும், இந்தப் போட்டியில் களம் இறங்குகின்றன. இன்று நடைபெறும் போட்டியில், ஆஸ்திரேலிய அணியில் எந்த மாற்றமும் செய்யப்பட வாய்ப்பில்லை என்றாலும், தோல்வியை சந்தித்துள்ள இந்திய அணியில், வீரர்கள் மாற்றம் செய்யப்பட வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.