கரூர் அருகே 67-வது ஆண்கள் சாம்பியன்ஷிப் கபடி போட்டி : நடிகை வரலட்சுமி சரத்குமார் கலந்து கொண்டு வாழ்த்து
Jan 18 2020 1:10PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கரூர் அருகே புகழூரில், அமைச்சூர் கபடி கழகம் மற்றும் தமிழ்நாடு கபடி கழகம் இணைந்து நடத்தும், மாநில அளவிலான ஆடவர் கபடி போட்டிக்கான தொடக்க நிகழ்ச்சியில், நடிகை வரலட்சுமி சரத்குமார் கலந்து கொண்டு, வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். அப்போது பேசிய நடிகை வரலட்சுமி சரத்குமார், முதல் முறையாக கபடி போட்டியை நேரில் கண்டு மகிழ்ச்சி அடைவதாக கூறினார். மூன்று நாட்கள் நடைபெறும் இப்போட்டியை, மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. அன்பழகன் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர் திரு. பாண்டியராஜன் தொடங்கி வைத்தனர்.