இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி - 2020-ம் ஆண்டின் முதல் ஒருநாள் தொடரை வெல்லுமா இந்திய அணி? - இரண்டு அணிகளும் இன்று பலப்பரீட்சை
Jan 19 2020 10:41AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இந்தியா - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான, மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி, கர்நாடக மாநிலம் பெங்களூரில், இன்று நடைபெற உள்ளது. இதில் வெற்றி பெறும் அணி, கோப்பையை வெல்லும் என்பதால், இந்தப் போட்டி ரசிகர்களிடையே ஆவலை ஏற்படுத்தி உள்ளது.
இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, மூன்று ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதன்படி, முதலிரண்டு ஆட்டங்களில், இரண்டு அணிகளும் தலா ஒன்றில் வெற்றி பெற்றுள்ளன. இந்நிலையில், இந்தியா - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான, மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி, கர்நாடக மாநிலம் பெங்களூருவில், இன்று பிற்பகல் 1.30 மணிக்கு நடைபெற உள்ளது.
இந்திய அணியை பொறுத்தவரை, கேப்டன் விராட் கோலி, துணைக் கேப்டன் ரோகித் சர்மா, தவான், ராகுல், ஷமி, பும்ரா உள்ளிட்டோர் நல்ல பார்மில் உள்ளனர். ஆஸ்திரேலிய அணியில், கேப்டன் பின்ச், வார்னர், ஸ்மித் உள்ளிட்டோர் பார்மில் உள்ளனர். இந்தப் போட்டியில் வெற்றி பெறும் அணி, கோப்பையை தட்டிச் செல்லும் என்பதால், இந்தப் போட்டி ரசிகர்களிடையே பெரும் ஆவலை ஏற்படுத்தி உள்ளது. கடந்த முறை இந்தியாவில் நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் தொடரை, ஆஸ்திரேலிய அணி வென்றது குறிப்பிடத்தக்கது.