ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா அபார வெற்றி - 2-க்கு ஒன்று என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றி அசத்தல்

Jan 20 2020 12:33PM
எழுத்தின் அளவு: அ + அ -

பெங்களூருவில் நடைபெற்ற மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்‍கெட் போட்டியில், 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றிபெற்றது.

இப்போட்டியில், டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட் செய்தது. நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர் முடிவில் அந்த அணி, 9 விக்கெட்டுக்கு 286 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் ஸ்மித், சிறப்பாக விளையாடி 131 ரன்கள் குவித்தார். இந்திய அணி தரப்பில், அதிகபட்சமாக, முஹமது ஷமி 4 விக்கெட்டுகளை எடுத்தார். இதனையடுத்து, 287 ரன்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி, பேட்டிங்கைத் தொடங்கிய இந்திய அணியின் வீரர்கள், அபாரமாக ஆடினர். நட்சத்திர வீரர் ரோஹித் ஷர்மா, அபாரமாக விளையாடி சதமடித்தார். 119 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். விராட்கோஹ்லி 89 ரன்களில் ஆட்டமிழந்தார். ஷ்ரேயாஸ் ஐயர் 35 பந்துகளில் 44 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

47 புள்ளி மூன்று ஓவரில், 289 ரன்கள் எடுத்து, இந்தியா வெற்றி பெற்றது. இந்த வெற்றியுடன், இரண்டுக்கு ஒன்று என்ற கணக்கில் இந்திய அணி தொடரைக் கைப்பற்றியது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00