இலங்கை அகதிகளுக்கு இடையேயான கால்பந்தாட்ட போட்டி : மதுரை அணியை வீழ்த்தி திண்டுக்கல் அணி வெற்றி
Jan 20 2020 11:17AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திண்டுக்கல்லில் நடைபெற்ற இலங்கை அகதிகளுக்கிடையிலான மாநில அளவிலான ஐவர் கால்பந்தாட்ட போட்டியில் அடியனூத்து முகாம் அணி வெற்றி பெற்றது.
திண்டுக்கல் சிறுமலை அடிவாரத்தில் அமைந்துள்ள அடியனூத்தில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில், பொங்கல் பண்டிகையையொட்டி, ஈழத் தமிழர்களுக்கு இடையிலான மாநில அளவிலான ஐவர் கால்பந்தாட்ட போட்டி, கடந்த 2 தினங்களாக நடைபெற்றது. இதில் மதுரை, திண்டுக்கல், கன்னியாகுமரி, கரூர், நாமக்கல், வேலூர், ஈரோடு உட்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் 30 அணிகள் கலந்து கொண்டன. இறுதிப்போட்டியில், மதுரை திருவாதவூர் அகதிகள் முகாம் அணியை வீழ்த்தி, அடியனூத்து அகதிகள் முகாம் அணி வெற்றி பெற்றது. வெற்றி பெற்ற அணிக்கு, பரிசுக் கோப்பையும், 15 ஆயிரம் ரொக்க பணமும் வழங்கப்பட்டது.