முன்னாள் கிரிக்கெட் வீரர் அசாரூதீன் மீது அவுரங்கபாத் போலீசார் மோசடி வழக்குப்பதிவு செய்து விசாரணை
Jan 23 2020 3:10PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
முன்னாள் கிரிக்கெட் வீரர் அசாரூதீன் மீது அவுரங்கபாத் போலீசார், மோசடி வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மஹாராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத் பகுதியை சேர்ந்த பயண ஏற்பாட்டாளர் திரு. முகமது சதாப்பிடம் 20 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக முன்னாள் கிரிக்கெட் வீரர் அசாரூதீன் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதைத்தொடர்ந்து அவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதுகுறித்து பேசிய திரு. அசாரூதீன், தன் மீதான புகாரில் உண்மையில்லை மறுப்பு தெரிவித்ததுடன், புகார் தெரிவித்தவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்போவதாக கூறினார்.