திருச்சி மாவட்ட அளவிலான பள்ளி குழந்தைகளுக்கான சதுரங்கப் போட்டியில் வெற்றி பெற்ற சிறுவர்களுக்கு, சான்றிதழ் வழங்கி பாராட்டு
Jan 27 2020 8:36PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருச்சி மாவட்ட அளவிலான பள்ளி குழந்தைகளுக்கான சதுரங்கப் போட்டியில் வெற்றி பெற்ற சிறுவர்களுக்கு, சான்றிதழ் வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது. திருச்சி மாவட்ட செஸ் சம்மேளனம், மாவட்ட அளவில் பள்ளி குழந்தைகளுக்கான சதுரங்கப் போட்டியினை நடத்தியது. 6 வயதிற்குட்பட்ட மாணாக்கர்களுக்கான இப்போட்டியில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 220 மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்றனர். 7 சுற்றுகளாக நடத்தப்பட்ட இப்போட்டியில், அதிக புள்ளிகளைப் பெற்று வெற்றி பெற்று, விக்னேஷ் என்ற சிறுவன் முதல் இடத்தைப் பிடித்தான்.