சேலத்தில் மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் : 1200-க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்பு
Feb 13 2020 4:40PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சேலத்தில் மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் மகாத்மா காந்தி விலையாட்டு மைதானத்தில் நடைபெற்றன. ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், கைப்பந்து, பாக்சிங், இறகுப்பந்து உள்ளிட்ட போட்டிகளில், ஆயிரத்து 200-க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டு தங்களது திறமையை வெளிபடுத்தினர். முதலிடத்தை பிடித்த வீரர்கள், மாநில அளவிலான விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க தகுதி பெற்றனர்.