கர்நாடகாவில் கம்பாளா போட்டி : ஸ்ரீனிவாச கவுடாவை தொடர்பு கொண்ட விளையாட்டு அமைச்சக அதிகாரிகள்

Feb 16 2020 4:46PM
எழுத்தின் அளவு: அ + அ -

கர்நாடகாவில் நடைபெற்ற கம்பாளா போட்டியில் வேகமாக ஓடி சாதனைப் படைத்த நபரை, மத்திய விளையாட்டுத் துறை அமைச்சகம் தொடர்பு கொண்டு பேசியுள்ளதாக, விளையாட்டுத் துறை அமைச்சர் திரு. கிரண் ரிஜிஜூ தெரிவித்துள்ளார்.

கர்நாடகாவில் நடைபெற்ற எருமை ஓட்டப்பந்தயமான கம்பாளாவில், ஸ்ரீனிவாச கவுடா என்ற நபர் பந்தய தூரமான 142 புள்ளி 5 மீட்டரை, 13 புள்ளி ஆறு இரண்டு விநாடிகளில் கடந்து சாதனை படைத்தார். உலகில் வேகமான மனிதர் என அழைக்கப்படும் ஜமைக்கா தடகள வீரர் உசைன் போல்டின் 100 மீட்டர் சாதனையை, ஸ்ரீனிவாச கவுடா முறியடித்துள்ளார் என பலரும் சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில், இது தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் திரு. கிரண் ரிஜிஜு, ஸ்ரீனிவாச கவுடாவை விளையாட்டு அமைச்சக அதிகாரிகள் தொடர்பு கொண்டனர் எனவும், தலைசிறந்த பயிற்சியாளர்கள் அவரை சோதனை செய்யவுள்ளனர் எனவும் கூறியுள்ளார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00