கர்நாடகாவில் கம்பாளா போட்டி : ஸ்ரீனிவாச கவுடாவை தொடர்பு கொண்ட விளையாட்டு அமைச்சக அதிகாரிகள்
Feb 16 2020 4:46PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கர்நாடகாவில் நடைபெற்ற கம்பாளா போட்டியில் வேகமாக ஓடி சாதனைப் படைத்த நபரை, மத்திய விளையாட்டுத் துறை அமைச்சகம் தொடர்பு கொண்டு பேசியுள்ளதாக, விளையாட்டுத் துறை அமைச்சர் திரு. கிரண் ரிஜிஜூ தெரிவித்துள்ளார்.
கர்நாடகாவில் நடைபெற்ற எருமை ஓட்டப்பந்தயமான கம்பாளாவில், ஸ்ரீனிவாச கவுடா என்ற நபர் பந்தய தூரமான 142 புள்ளி 5 மீட்டரை, 13 புள்ளி ஆறு இரண்டு விநாடிகளில் கடந்து சாதனை படைத்தார். உலகில் வேகமான மனிதர் என அழைக்கப்படும் ஜமைக்கா தடகள வீரர் உசைன் போல்டின் 100 மீட்டர் சாதனையை, ஸ்ரீனிவாச கவுடா முறியடித்துள்ளார் என பலரும் சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில், இது தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் திரு. கிரண் ரிஜிஜு, ஸ்ரீனிவாச கவுடாவை விளையாட்டு அமைச்சக அதிகாரிகள் தொடர்பு கொண்டனர் எனவும், தலைசிறந்த பயிற்சியாளர்கள் அவரை சோதனை செய்யவுள்ளனர் எனவும் கூறியுள்ளார்.