போலந்து நாட்டில் நடைபெற்ற பனிச்சறுக்குப் போட்டி : ஆர்வத்துடன் பங்கேற்று அசத்திய கிறிஸ்தவ பாதிரியார்கள்
Feb 17 2020 7:45PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
போலந்து நாட்டில் கிறிஸ்தவ பாதிரியார்களுக்கு இடையே நட்பு ரீதியாக நடைபெற்ற பனிச்சறுக்கு போட்டியில் ஏராளமானோர் பங்கேற்றனர்.
போப் இரண்டாம் ஜான் பால் பனிச்சறுக்கில் மிகவும் ஆர்வம் உடையவர். அவரால் உந்தப்பட்ட ஏராளமான பாதிரியார்கள் போலந்து உள்ளிட்ட நாடுகளில் ஒவ்வொரு ஆண்டும் பனிச்சறுக்கு போட்டியை நடத்துகின்றனர். இந்த ஆண்டு விஸ்லா நகரில் நடைபெற்ற பனிச்சறுக்கு போட்டியில், பாதிரியார்களின் வயதுக்கு ஏற்றபடி நான்கு பிரிவாகப் பிரிக்கப்பட்டு, 800 மீட்டர், 1000 மீட்டர் என வெவ்வேறு அளவில் போட்டிகள் நடத்தப்பட்டன. போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கு போப் இரண்டாம் ஜான் பால் நினைவுக் கோப்பைகள் வழங்கப்பட்டன.