கும்பகோணத்தில் மாநில அளவில் கல்லூரிகளுக்கிடையேயான விளையாட்டு போட்டிகள் : 29 கல்லூரிகளிலிருந்து 600 வீரர்கள் பங்கேற்பு
Feb 21 2020 9:15PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் உள்ள தனியார் நிகர் நிலைப் பல்கலைக் கழகத்தில் மாநில அளவில் கல்லூரிகளுக்கிடையேயான விளையாட்டு போட்டிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. மூன்று நாட்கள் நடைபெறும் இப்போட்டிகளில் கிரிக்கெட், கூடைப்பந்து, கைப்பந்து, கால்பந்து, சதுரங்கம் ஆகிய விளையாட்டுகள் இடம் பெற்றுள்ளன. இதில், மத்திய பல்கலைக் கழகம், அண்ணா பல்கலைக் கழகம், அண்ணாமலை பல்கலைக் கழகம் உள்ளிட்ட 8 பல்கைக் கழகங்களைச் சேர்ந்த, 29 கல்லூரிகளிலிருந்து சுமார் 600 விளையாட்டு வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.