வெலிங்டன் டெஸ்ட் கிரிக்கெட் முதல் இன்னிங்ஸில் இந்தியாவைவிட 183 ரன்கள் முன்னிலை பெற்றது நியூசிலாந்து - இரண்டாவது இன்னிங்ஸில் விரைவில் தொடக்க வீரரை இழந்து இந்தியா தடுமாற்றம்
Feb 23 2020 1:17PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸிலும் இந்தியா தடுமாறி வருகிறது. கேப்டன் கோலி உள்ளிட்ட முன்னணி வீரர்களை இழந்து இந்தியா நெருக்கடியில் சிக்கியுள்ளது.
இப்போட்டியின் மூன்றாம் நாளான இன்று நியூசிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸை தொடர்ந்து விளையாடியது. 5 விக்கெட்டுக்கு 216 ரன்கள் என்ற ஸ்கோருடன் இன்னிங்ஸை தொடர்ந்த நியூசிலாந்து, 348 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது. இதன் மூலம் அந்த அணி, இந்திய அணியின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரைவிட 183 ரன்கள் முன்னிலை பெற்றது. பின்னர் இந்தியா இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது. தொடக்க வீரர் மயங்க் அகர்வால் மட்டுமே தாக்குப்பிடித்து விளையாடி அரைசதம் அடித்தார். கேப்டன் விராட் கோலி, புஜாரா உள்ளிட்ட முன்னணணி வீரர்கள் அடுத்தடுத்து அவுட் ஆனதால் இந்தியா நெருக்கடிக்கு உள்ளாகியது. இதனால் இந்த போட்டியில் நியூசிலாந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது.