சென்னையில் எண்ணெய் நிறுவன ஊழியர்கள் பங்கேற்கும் தடகள போட்டி : 8 எண்ணெய் நிறுவனங்களில் பணிபுரியும் வீரர்கள் பங்கேற்பு
Feb 25 2020 12:43PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் சார்பில், 40-வது தடகள போட்டி, சென்னை நேரு விளையாட்டு அரங்கில் தொடங்கியது.
சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிர்வாக இயக்குனர் திரு. பாண்டே, தடகள போட்டியை இன்று தொடங்கி வைத்தார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், எண்ணெய் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களில் தலை சிறந்த விளையாட்டு வீரர்களை உருவாக்க இதுபோன்ற விளையாட்டு போட்டிகள் நடத்துவது உதவியாக இருக்கும் என தெரிவித்தார்.
மூன்று நாட்கள் நடைபெறும் இந்த போட்டியில், இந்தியாவில் உள்ள எட்டு எண்ணெய் நிறுவனங்களில் பணிபுரியும் வீரர்கள் பங்கேற்கின்றனர்.