உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டி அடுத்த மாதம் டெல்லியில் நடைபெறுகிறது : கொரோனா தாக்கம் காரணமாக சீனா உட்பட 5 நாடுகள் பங்கேற்க முடியாத நிலை
Feb 26 2020 6:45PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
டெல்லியில் அடுத்தமாதம் நடைபெறவுள்ள உலககோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக 6 நாடுகள் பங்கேற்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
டெல்லியில் உள்ள கர்ணி சிங் துப்பாக்கிச் சுடுதல் மையத்தில் அடுத்த மாதம் 15ம் தேதி முதல் 26ம் தேதிவரை உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டி நடைபெறவுள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக சீனா இந்த போட்டியில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தாய்வான், ஹாங்காங், மக்காவ், வடகொரியா மற்றும் துர்க்மெனிஸ்தான் ஆகியவை கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக பயண தடை விதித்துள்ளதால் அந்நாட்டு வீரர்களும் போட்டியில் கலந்துகொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தான் நாட்டு வீரர்கள் ஒலிம்பிக் போட்டிக்கு தயாராகி வருவதால் இந்த போட்டியில் பங்கேற்க மாட்டார்கள் என அந்நாட்டு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.