டெல்லி வன்முறை சம்பவங்கள் : முன்னாள் கிரிக்கெட் வீரர்கள், யுவராஜ் சிங், சேவாக் வேதனை
Feb 27 2020 1:29PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
டெல்லி வன்முறை சம்பவங்கள் குறித்து, முன்னாள் கிரிக்கெட் வீரர்கள், யுவராஜ் சிங், சேவாக் ஆகியோர் வேதனை தெரிவித்துள்ளனர்.
இது குறித்து ட்விட்டரில் கருத்து பதிவிட்டுள்ள யுவராஜ் சிங், டெல்லியில் நடைபெற்று வரும் சம்பவங்கள், இதயத்தை நொறுக்கும் வகையில் உள்ளதாகவும், மக்கள் அனைவரும் அமைதியையும், நல்லிணக்கத்தையும் பின்பற்றுமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சேவாக் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், டெல்லியில் நடப்பது துரதிர்ஷ்டவசமானது என்றும், டெல்லி மக்கள் அமைதி காக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார். நடைபெறும் நிகழ்வுகள் நாட்டின் தலைநகரின் மீது கரையை உண்டாக்கிவிட கூடாது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
டெல்லி கலவரம் வருத்தம் அளிப்பதாகவும், அனைத்தும் விரைவில் சகஜ நிலைக்கு திரும்பும் என எதிர்ப்பார்க்கதாகவும், ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.