டெல்லியில் நடைபெற்ற அகில இந்திய மிஸ்டர் டெஃப் போட்டி : பட்டம் வென்று ஊர் திரும்பியவருக்கு பாராட்டு
Mar 3 2020 8:15PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
டெல்லியில் நடைபெற்ற போட்டியில், அகில இந்திய மிஸ்டர் டெஃப் போட்டியில், பட்டத்தை வென்ற மாற்றுத் திறனாளிக்கு, சொந்த ஊரில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. திருநெல்வேலி மாவட்டம் வடக்கன்குளம் அருகே சிவசுப்ரமணியபுரத்தை சேர்ந்தவர், ரமேஷ். பேசும் திறன் மற்றும் கேட்கும் திறன் குன்றியவர். தலைநகர் டெல்லியில் அகில இந்திய மிஸ்டர் டெஃப் போட்டியில், இவர் முதல் பரிசை வென்றார். வெற்றியுடன் ஊர் திரும்பிய அவருக்கு, ஊர்மக்கள் பாராட்டு தெரிவித்தனர்.