ஐ.சி.சி., மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் - முதலாவது அரையிறுதிப் போட்டியில், இந்தியா - இங்கிலாந்து அணிகள் இன்று பலப்பரீட்சை
Mar 5 2020 1:44PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஐ.சி.சி., மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் முதலாவது அரையிறுதிப் போட்டியில், இந்தியா - இங்கிலாந்து அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன. ஐ.சி.சி., மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர், ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. லீக் சுற்றுப் போட்டிகள் முடிவடைந்த நிலையில், அரையிறுதிப் போட்டிகள் நடைபெற உள்ளன. சிட்னியில் இன்று நடைபெறும் முதலாவது அரையிறுதிப் போட்டியில், இந்தியா - இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன. லீக் சுற்றின் நான்குப் போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. இளம் வீராங்கனை ஷஃபாலி வர்மா, கேப்டன் ஹர்மன்பிரித் கவுர், பந்து வீச்சாளர் பூணம் யாதவ் உள்ளிட்டோர் இந்திய அணிக்கு நம்பிக்கை தருகின்றனர். இந்தப் போட்டியில் வெற்றி பெறும் அணி, வரும் 8-ம் தேதி, சர்வதேச மகளிர் தினத்தன்று நடைபெறும் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெறும்.