டி-20 மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதி ஆட்டத்திற்கு முதல்முறையாக முன்னேறியது இந்தியா - மழையால் அரையிறுதி போட்டி ரத்தானதால் இந்தியாவுக்கு வாய்ப்பு
Mar 5 2020 1:20PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஐ.சி.சி., மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்திற்கு இந்தியா முதல்முறையாக முன்னேறியுள்ளது.
ஐ.சி.சி., மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர், ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. லீக் சுற்றுப் போட்டிகள் முடிவடைந்த நிலையில், இந்தியா - இங்கிலாந்து, ஆஸ்திரேலியா-தென்னாப்பிரிக்க அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின. இன்று காலை சிட்னியில் நடைபெறவிருந்த இந்தியா-இங்கிலாந்து இடையேயான முதல் அரையிறுதி ஆட்டம் மழையால் ரத்தானது. இதையடுத்து 'ஏ' பிரிவில் அதிக புள்ளிகளுடன் இந்தியா முதலிடம் பிடித்திருந்ததால், இறுதிப்போட்டிக்கு முன்னேறியதாக அறிவிக்கப்பட்டது. இதன்மூலம் மகளிர் டி-20 உலகக் கோப்பையில் முதல்முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறி இந்தியா சாதனை படைத்துள்ளது.
2-வது அரையிறுதிப்போட்டி இன்று பிற்பகலில் நடைபெறவுள்ளது. அதில் வெற்றி பெறும் அணியுடன் வரும் 8ம் தேதி, சர்வதேச மகளிர் தினத்தன்று நடைபெறவுள்ள இறுதி ஆட்டத்தில் இந்தியா விளையாடும்.