பிரபல கால்பந்து வீரர் ரொனால்டினோ கைது - பாஸ்போர்ட்டில் தவறான விவரம் குறிப்பிட்ட புகாரில் பராகுவே போலீசார் நடவடிக்கை
Mar 7 2020 12:22PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பிரபல கால்பந்து வீரர் ரொனால்டினோ, பராகுவே நாட்டில் கைது செய்யப்பட்டார்.
பிரசில் கால்பந்தாட்ட வீரரான ரொனால்டினோ, தனது வாழ்க்கை சரித புத்தகத்தைப் பிரபலபடுத்துவதற்காக பராகுவே சென்றார். அங்கு அவர் தங்கிய ஹோட்டலில் போலீசார் நடத்திய சோதனையில் கைப்பற்றப்பட்ட பாஸ்போர்ட்டில், ரொனால்டினோ பராகுவே குடிமகன் எனக் குறிப்பிடப்பட்டு இருந்தது. பிறந்த நாட்டை மாற்றித் தெரிவித்த புகாரில் அவர் கைது செய்யப்பட்டார். இது உலகமெங்கும் உள்ள ரொனால்டினோ ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னதாக தன்னுடைய மீன் பண்ணையில் நடைபெற்ற மோசடி வழக்கில் அவரது பாஸ்போர்ட் முடக்கப்பட்டது. நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு அவருக்கு பாஸ்போர்ட் அளிக்கப்பட்டது. இந்தநிலையில், பாஸ்போர்ட்டில் தவறாக விவரம் குறிப்பிட்ட புகாரில், ரொனால்டினோ மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.