கொரோனா அச்சம் காரணமாக வீரர்கள் கைகுலுக்க மாட்டார்கள் : தென்னாப்பிரிக்‍க கிரிக்‍கெட் பயிற்சியாளர் அதிரடி அறிவிப்பு

Mar 10 2020 3:11PM
எழுத்தின் அளவு: அ + அ -

கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை காரணமாக, இந்திய கிரிக்கெட் தொடரின்போது, தென்னாப்பிரிக்க வீரர்கள், மற்ற வீரர்களுடன் கைகுலுக்க மாட்டார்கள் என அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் Mark Boucher தெரிவித்துள்ளார்.

தென்னாப்பிரிக்க அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து, 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இந்த போட்டிகள் வரும் 12ம் தேதி முதல் 18ம் தேதி வரை நடைபெறவுள்ளன. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உலகம் முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட நாடுகளின் சுகாதாரத்துறை மும்முரமாக மேற்கொண்டுள்ளது. இந்நிலையில், கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான போட்டியின்போது தங்கள் நாட்டு வீரர்கள், இந்திய அணி வீரர்களுடன் கைகுலுக்கமாட்டார்கள் என தலைமை பயிற்சியாளர் Mark Boucher தெரிவித்துள்ளார். மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தங்கள் வீரர்கள் கொண்டு வரும் கிட் பேக்கில் அதிகளவில் ஹேண்ட்வாஷ் பாதுகாப்பான்கள் இருக்கும் என்றும் Mark Boucher தெரிவித்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00