கொரோனா அச்சம் - ஐ.பி.எல். போட்டிகளுக்கு தடை கோரும் வழக்கு : அறிக்கை தாக்கல் செய்ய பி.சி.சி.ஐ.-க்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
Mar 12 2020 1:10PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளின் போது, கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க எடுக்கப்பட உள்ள நடவடிக்கைகளை அறிக்கையாக தாக்கல் செய்ய பி.சி.சி.ஐ.-க்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, இம்மாத இறுதியில் நடைபெறவுள்ள ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளுக்கு தடை விதிக்கக்கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஐ.பி.எல். போட்டிகளை தள்ளிவைப்பதா அல்லது போட்டிகளின்போது மைதானத்திற்கு வரும் ரசிகர்களை தெர்மல் ஸ்கேனரை கொண்டு சோதிப்பதா என்பது குறித்து விளக்கமளிக்க பிசிசிஐ தரப்பில் அவகாசம் கோரப்பட்டது. இதையடுத்து, கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க எடுக்கப்பட உள்ள நடவடிக்கைகளை அறிக்கையாக தாக்கல் செய்ய பி.சி.சி.ஐ.-க்கு உத்தரவிட்ட நீதிமன்றம், வழக்கு விசாரணையை வரும் 23-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.