இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி - தர்மசாலாவில் மழை காரணமாக ஆட்டம் கைவிடப்பட்டது
Mar 12 2020 7:09PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தர்மசாலாவில் மழை காரணமாக, இந்தியா-தென்னாப்பிரிக்கா இடையேயான ஒருநாள் கிரிக்கெட் போட்டி, ஒரு பந்துகூட வீசப்படாமல் கைவிடப்பட்டுள்ளது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்பிரிக்க அணி, இந்தியாவுடன் 3 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுகிறது. முதலாவது போட்டி, ஹிமாச்சலப்பிரதேச மாநிலம் தர்மசாலாவில் இன்று நடைபெறுவதாக இருந்தது. எனினும், அங்கு தொடர் மழையால், ஒருபந்து கூட வீசப்படாத நிலையில், போட்டி கைவிடப்படுவதாக நடுவர்கள் அறிவித்தனர். 2வது ஒருநாள் போட்டி, உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் வரும் 15ம் தேதி நடைபெறவுள்ளது.