திருச்சியில் மாநில அளவிலான மகளிர் கூடைப்பந்து போட்டி - 12 அணிகள் பங்கேற்பு
Mar 14 2020 1:12PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அன்னை தெரசா கோப்பைக்காக மாநில அளவிலான மகளிர் கூடைப்பந்து போட்டி இன்று தொடங்கியது. 12 கல்லூரிகளைச் சேர்ந்த மாணவிகள் போட்டியில் பங்கேற்றுள்ளனர்.
திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் மாநில அளவிலான மகளிர் கல்லூரிகளுக்கு இடையே கூடைப்பந்து போட்டி இன்று காலை தொடங்கியது. சென்னை, திருச்சி, சேலம், தேனி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் இருந்தும், 12 கல்லூரிகளை சேர்ந்த மகளிர் கூடைப்பந்து அணிகள் இந்த போட்டியில் பங்கேற்றுள்ளன. இன்று தொடங்கி, நாளை மறுநாள் வரை நடைபெறும் இப்போட்டியானது, லீக் மற்றும் சூப்பர் லீக் முறையில் நடைபெறும். இன்று காலை தொடங்கிய முதல் போட்டியில், ஜமால் முகமது கல்லூரி 43-20 என்ற புள்ளிக்கணக்கில் ஜெயராஜ் கல்லூரி அணியை வீழ்த்தியது.