ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெறவிருந்த ஒலிம்பிக் போட்டிக்கான புதிய தேதி : அடுத்த ஆண்டு ஜூலை 23ம் தேதி தொடங்குமென சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி அறிவிப்பு
Mar 31 2020 3:57PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
டோக்கியோ ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி, 2021ஆம் ஆண்டு ஜூலை 23ஆம் தேதி தொடங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜப்பான் தலைநகர் டோக்கியாவில், வரும் ஜூலை மாதம், ஒலிம்பிக் போட்டி நடைபெற இருந்தது. ஆனால், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நாடுகள், ஒலிம்பிக் போட்டிகளை தள்ளிவைக்க வேண்டுமென்று கோரிக்கை விடுத்தன. அதனை ஏற்று, ஒலிம்பிக் போட்டியை, ஒராண்டு தள்ளிவைப்பதாக, சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி அறிவித்தது. ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேவும் இதனை உறுதி செய்தார். இந்நிலையில், ஒத்திவைக்கப்பட்ட டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள், 2021ஆம் ஆண்டு ஜூலை 23ஆம் தேதி தொடங்குமென, டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான ஒருங்கிணைப்புக் குழு அறிவித்துள்ளது. 2021ஆம் ஆண்டு ஜூலை 23ஆம் தேதி தொடங்கும் போட்டியானது, ஆகஸ்ட் 8ஆம் தேதி வரை நடைபெறுமென, டோக்கியா ஒலிம்பிக் போட்டிக்கான ஒருங்கிணைப்புக்குழு தலைவர் YOSHIRO MORI தெரிவித்துள்ளார். மேலும், மாற்றுத் திறனாளிகளுக்கான பாரா ஒலிம்பிக் போட்டிகள் ஆகஸ்ட் 24ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 5ஆம் தேதி வரை நடைபெறும் என்றும், அவர் அறிவித்துள்ளார்.