சர்வதேச அளவில் நடைபெறும் ஸ்கேட்டிங் போட்டியில் பங்கேற்க பயிற்சி பெற அனுமதிக்க வேண்டும் - ஸ்கேட்டிங் வீரர்கள் கோரிக்கை
Jun 2 2020 11:00AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சர்வதேச அளவில் நடைபெறும் ஸ்கேட்டிங் போட்டியில் பங்கேற்க பயிற்சி பெற அனுமதிக்க வேண்டுமென தூத்துக்குடியை சேர்ந்த ஸ்கேட்டிங் வீரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த இளம் ஸ்கேட்டிங் வீரர்கள், தேசிய மற்றும் சர்வதேச அளவிலான ஸ்கேட்டிங் போட்டிகளில் கலந்து கொண்டு, சாதனை படைத்து வருகின்றனர். கடந்த ஆண்டு தாய்லாந்தில் நடைபெற்ற சர்வதேச போட்டியில், இந்திய அணி சார்பில் பங்கேற்று தங்கம் வென்றனர். இந்த ஆண்டு மலேசியாவில் நடைபெற வேண்டிய சர்வதேச ஸ்கேட்டிங் போட்டி, கொரோனா ஊரடங்கு காரணமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்த போட்டியில் பங்கேற்க தொடர் பயிற்சி பெற வேண்டிய இவர்கள், ஊரடங்கு காரணமாக, பயிற்சியில் ஈடுபட முடியாமல், கடந்த மூன்று மாதங்களாக சிரமமடைந்து வருகின்றனர். சர்வதேச போட்டியில் பங்கேற்பவர்கள் பயிற்சி மேற்கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்தும், மாவட்ட நிர்வாகம் இதுவரை அனுமதி அளிக்காததால், சிரமமடைந்து வருவதாக, ஸ்கேட்டிங் வீரர்கள் தெரிவிக்கின்றனர்.