பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஷாகித் அஃப்ரிடிக்கு கொரோனா உறுதி - நாடு முழுவதும் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா தொற்று
Jun 13 2020 4:02PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் ஷாகித் அஃப்ரிடிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக இன்று வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், கடந்த வியாழக்கிழமை முதல் தான் உடல்நலம் பாதிக்கப்பட்டவதாகவும், பரிசோதனை செய்து பார்த்ததில் தமக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதாகவும் கூறியுள்ளார். கொரோனா பாதிப்பிலிருந்து விரைவில் மீண்டு வர இறைவனை பிரார்த்திப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். இதன்மூலம் கொரோனா பாதித்த முதல் கிரிக்கெட் வீரர் அஃப்ரிடி ஆவார்.