இந்திய அணி வீரர் தோனி சுயசரிதையில் ஹீரோவாக நடித்த சுஷாந்த்சிங் ராஜ்புத் - மும்பை பாந்த்ராவில் தற்கொலை - பிரதமர் நரேந்திர மோதி இரங்கல்
Jun 14 2020 5:43PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இந்திய கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனியின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் தோனியாக நடித்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மும்பையில் உள்ள தனது இல்லத்தில் தற்கொலை செய்துகொண்டார். இதற்கு பிரதமர் திரு.நரேந்திர மோதி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.
தொலைக்காட்சி தொடர்கள் மூலம் அறிமுகமான நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத், தொடர்ந்து திரைப்படங்களிலும் நடித்து வந்தார். பி.கே., சுதேசி ரொமேன்ஸ், கேதர்நாத் உள்ளிட்ட எண்ணற்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்திய வீரர் மகேந்திர சிங் தோனியின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் தோனியாக நடித்ததன் மூலம் இந்திய அளவில் புகழடைந்தார். இந்நிலையில், 34 வயதாகும் சுஷாந்த் சிங் ராஜ்புத், மும்பை பாந்த்ராவில் உள்ள தனது இல்லத்தில் தற்கொலை செய்துகொண்டார். தூக்கிட்ட நிலையில் அவரது உடல் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது, திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
கடந்த வாரம், சுஷாந்த்தின் முன்னாள் மேலாளர் திஷா சாலியான், மும்பையில் 14-வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, சுஷாந்த் சிங் ராஜ்புத் உயிரிழந்தது குறித்து பிரதமர் திரு.நரேந்திர மோதி, கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், இந்திய அணி கேப்டன் விராட் கோலி மற்றும் பாலிவுட் நட்சத்திரங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.