பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வீரர்கள் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு - தனிமையில் இருக்கும்படி அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவுறுத்தல்
Jun 23 2020 12:19PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வீரர்கள் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு, மூன்று டெஸ்ட் போட்டிகள் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க உள்ளது. இதற்காக, இங்கிலாந்துக்கு பாகிஸ்தான் அணி நாளை சுற்றுப்பயணம் செல்ல உள்ளது. இந்நிலையில், பாகிஸ்தான் வீரர்களுக்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில், ஷாதப் கான், ஹைதர் அலி, ஹரிஷ் ராஃப் ஆகிய மூன்று வீரர்களுக்கு, தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. மூன்று வீரர்களுக்கும் அறிகுறிகள் எதுவும் இல்லை என்றும், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவுடன், தனிமையில் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டு இருப்பதாகவும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. முன்னதாக, பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அஃப்ரிடிக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.