கால்பந்து நாயகனான லியோனல் மெஸ்ஸிக்கு 33-வது பிறந்தநாள் : சமூக வலைதளங்களில் ரசிகர்கள் வாழ்த்து
Jun 24 2020 5:20PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
உலகளவில் புகழ்பெற்ற கால்பந்து நாயகனான லியோனல் மெஸ்ஸியின் பிறந்தநாளையொட்டி, அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்கள் மூலமாக அவருக்கு வாழ்த்துகளை கூறி வருகின்றனர்.
அர்ஜெண்டினாவைச் சேர்ந்த மெஸ்ஸி, தனது 13 வயது முதலே கால்பந்து போட்டிகளில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். 2012-ம் ஆண்டு முதல் மெஸ்ஸி உலகளவில் புகழ் பெற்றார். பார்சிலோனா அணிக்காக 2012-ம் ஆண்டில் 79 கோல்களையும், அதே ஆண்டில் அர்ஜென்டினா அணிக்காக 12 கோல்களையும் அடித்து ஒரே ஆண்டில் அதிக கோல்கள் அடித்த வீரர் என்ற உலக சாதனையை படைத்தார். கால்பந்து உலகில் மிக உயரிய விருதாகக் கருதப்படும் "ஐரோப்பாவின் தங்கக் காலணி" விருதை 6 முறை வென்றுள்ளார். பெய்ஜிங்கில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியிலும் மெஸ்ஸி தங்கம் வென்றுள்ளார். உலகளவில் கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்டுள்ள லியோனல் மெஸ்ஸி, இன்று தனது 33-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையொட்டி, டிவிட்டர், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலமாக மெஸ்ஸியின் ரசிகர்கள், அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.