T-20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை நடத்துவது குறித்து ICC நாளை முடிவு - போட்டி தள்ளி வைக்கப்பட்டால் IPL கிரிக்கெட்டை நடத்தும் ஆவலில் BCCI
Jul 19 2020 5:40PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
T-20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை நடத்துவதா? அல்லது ஒத்திவைப்பதா? என்பது குறித்து ICC நாளை முடிவு செய்கிறது.
சர்வதேச அளவில் புகழ்பெற்ற T-20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி, வரும் அக்டோபர் 12-ம் தேதி ஆஸ்திரேலியாவில் தொடங்குவதாக இருந்தது. ஆனால் உலகம் முழுவதும் நிலவி வரும் கொரோனா அச்சம் காரணமாக, திட்டமிட்டபடி, இப்போட்டியை நடத்துவது சந்தேகமாகியுள்ளது. இதுகுறித்து இறுதி முடிவு எடுக்க துபாயில் நாளை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கூடுகிறது. இப்போட்டி தள்ளிப் போகும் பட்சத்தில், அந்த நேரத்தில் IPL கிரிக்கெட் நடத்த இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் ஆர்வம் காட்டி வருகிறது. இதனால் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் நாளைய கூட்டம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.