செப்டம்பர் 19ம் தேதி ஐபிஎல் போட்டி தொடங்கவுள்ளதாக தகவல் - நவம்பர் 8ல் இறுதிப்போட்டி
Jul 24 2020 10:29AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஐபிஎல் கிரிக்கெட் தொடர் செப்டம்பர் மாதம் 19ம் தேதி தொடங்கி நவம்பர் 8ம் தேதிவரை நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்ததைத் தொடர்ந்து வழக்கமாக மார்ச் மாதம் தொடங்க இருந்த ஐபிஎல் போட்டிகள் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டன. இந்நிலையில், 2020-ம் ஆண்டுக்கான 13-வது ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் செப்டம்பர் மாதம் முதல் நவம்பர் வரை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாக ஐபிஎல் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. போட்டிக்கான தேதி குறித்து அடுத்த வாரம் ஐபிஎல் குழு முடிவெடுக்கவுள்ளது. இந்நிலையில், செப்டம்பர் 19ம் தேதி ஐபிஎல் தொடர் தொடங்க வாய்ப்புள்ளதாக பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. நவம்பர் 8ம் தேதிவரை போட்டித் தொடர் நடைபெற உள்ளதாகவும், போட்டியில் பங்கேற்பதற்காக வீரர்கள் ஆகஸ்ட் 20ம் தேதியே அரபு அமீரகத்திற்கு புறப்படவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.