ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த மத்திய அரசு அனுமதி - ஐ.பி.எல் தலைவர் பிரிஜேஷ் பட்டேல் தகவல்
Aug 11 2020 10:31AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஐக்கிய அரபு அமீரகத்தில் 13-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரை நடத்துவதற்கு மத்திய அரசின் அனுமதி கிடைத்து விட்டதாக ஐ.பி.எல்., தலைவர் திரு. பிரிஜேஷ் பட்டேல் தெரிவித்துள்ளார். கொரோனா அச்சம் காரணமாக 13-வது ஐபிஎல் தொடர், ஐக்கிய அரபு அமீரகத்தின் ஷார்ஜா, அபுதாபி, துபாய் ஆகிய நகரங்களில் நடைபெற உள்ளது. இதையடுத்து, ஐ.பி.எல் தொடரை வெளிநாட்டு மண்ணில் நடத்த மத்திய அரசிடம் பிசிசிஐ அனுமதி கோரியிருந்தது. இந்நிலையில் மத்திய அரசிடமிருந்து முறைப்படி அனுமதி கிடைத்துள்ளதாக, ஐபிஎல் தலைவர் திரு. பிரிஜேஷ் பட்டேல் தெரிவித்துள்ளார்.