அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி - மகளிர் ஒற்றையர் பிரிவில் 2-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றார் ஜப்பான் வீராங்கனை ஒசாகா
Sep 13 2020 11:54AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில், மகளிர் ஒற்றையர் பிரிவில் ஜப்பான் வீராங்கனை நவோமி ஒசாகா சாம்பியன் பட்டம் வென்றார்.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்று வரும் அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி, தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதன் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதியாட்டத்தில், தரவரிசையில் 4-ம் இடத்தில் உள்ள ஜப்பானின் நவோமி ஒசாகா, Belarus வீராங்கனை விக்டோரியா அஸ்ரென்காவை எதிர்கொண்டார். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில், முதல் செட்டை 1-க்கு 6 என இழந்த ஒசாகா, பின்னர் தனது வழக்கமான அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி அடுத்த 2 செட்களை தனதாக்கினார். இறுதியில் 1-6, 6-3, 6-3 என்ற செட்கணக்கில் வெற்றிபெற்று, 2-வது முறையாக அமெரிக்க ஓபன் பட்டத்தை ஒசாகா கைப்பற்றினார்.
நாளை நடைபெறவுள்ள ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில், ஜெர்மனி வீரர் அலெக்சாண்டர் வெரேவ்-ஐ, ஆஸ்திரியாவின் டொமினிக் தீம் எதிர்கொள்கிறார்.