நாளை தொடங்குகிறது ஐ.பி.எல்., கிரிக்கெட் திருவிழா - முதல் போட்டியில் மும்பை - சென்னை அணிகள் பலப்பரீட்சை
Sep 18 2020 7:41AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
13-வது ஐ.பி.எல்., கிரிக்கெட் தொடர், ஐக்கிய அரபு அமீரகத்தில் நாளை பிரம்மாண்டமாக தொடங்க உள்ளது. அபுதாபியில் நடைபெறும் முதல் போட்டியில், நடப்பு சாம்பியன் மும்பை அணியை, சென்னை அணி எதிர்கொள்கிறது.
இந்தியாவில், ஏப்ரல் - மே மாதங்களில் நடைபெறவிருந்த 13-வது ஐ.பி.எல்., டி20 கிரிக்கெட் தொடர், கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக, ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மாற்றப்பட்டது. இதையடுத்து, ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய், ஷார்ஜா, அபுதாபி ஆகிய நகரங்களில், வரும் 19-ம் தேதி முதல் போட்டிகள் தொடங்கி நடைபெற உள்ளன.
கொரோனா தொற்று காரணமாக, பல்வேறு முன்னேற்பாடுகளுடன் ஐ.பி.எல்., கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ளது. எட்டு அணிகளின் வீரர்களும் தனிமைப்படுத்திக் கொண்ட பிறகு பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், 13-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நாளை பிரம்மாண்டமாக தொடங்க உள்ளது. அபுதாபியில் நடைபெறும் முதல் போட்டியில், நடப்பு சாம்பியன் மும்பை அணியை, சென்னை அணி எதிர்கொள்கிறது. இந்திய நேரப்படி இரவு 7 முப்பது மணிக்கு போட்டி தொடங்குகிறது.