13-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 2-வது லீக் ஆட்டம் - துபாயில் டெல்லி - பஞ்சாப் அணிகள் இன்று மோதல்
Sep 20 2020 2:42PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
13-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 2-வது லீக் ஆட்டத்தில், டெல்லி - பஞ்சாப் அணிகள் மோத உள்ளன.
13-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர், ஐக்கிய அரபு அமீரகத்தில் நேற்று தொடங்கியது. அபுதாயில் நடைபெற்ற தொடரின் முதல் லீக் போட்டியில், மும்பை அணியை வீழ்த்திய சென்னை அணி, தொடரை வெற்றியுடன் தொடங்கியுள்ளது. கொரோனா அச்சம் காரணமாக, மைதானத்தில் ரசிகர்களுக்கு அனுமதி அளிக்கப்படாததால், மைதானம் வெறிச்சோடி காணப்பட்டது.
இந்நிலையில், துபாயில் இன்று நடைபெறும் இரண்டாவது லீக் ஆட்டத்தில், டெல்லி - பஞ்சாப் அணிகள் மோத உள்ளன. இந்திய நேரப்படி, இரவு 7.30 மணிக்கு போட்டி தொடங்க உள்ளது. டெல்லி அணியை பொறுத்தவரை, கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர், ரிஷப் பந்த், ரவிச்சந்திர அஸ்வின், தவான், ரகானே, ரபாடா உள்ளிட்டோர் சிறப்பாக தயாராகியுள்ளனர். கே.எல்.ராகுல் தலைமையில் பஞ்சாப் அணி முதன்முறையாக போட்டியில் களமிறங்க உள்ளது.