துபாயில் நடைபெற்ற ஐ.பி.எல். போட்டியின் 2-வது லீக் ஆட்டம் : சூப்பர் ஓவரில் பஞ்சாபை வீழ்த்தியது டெல்லி அணி
Sep 21 2020 9:49AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பஞ்சாப் அணிக்கு எதிரான ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில்,
பரபரப்பான சூப்பர் ஓவரில் டெல்லி அணி வெற்றிபெற்றது.
ஐ.பி.எல் 2020 சீசனின் 2-வது ஆட்டம், துபாயில் நேற்று இரவு நடைபெற்றது. இதில் டெல்லி கேப்பிட்டல்ஸ் - கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி, பந்து வீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி, 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 157 ரன்கள் எடுத்தது.
இதனையடுத்து, 158 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணி, 8 விக்கெட் இழப்புக்கு 157 ரன்கள் எடுத்தது. இதனால் ஆட்டம் சமனில் முடிந்தது. இதையடுத்து, சூப்பர் ஓவர் வீசப்பட்டது. இதில் முதலில் ஆடிய பஞ்சாப் அணி 2 விக்கெட்டுக்கு 2 ரன்கள் மட்டுமே எடுத்தது. டெல்லி வீரர் ரபாடா சிறப்பாக பந்து வீசி 2 விக்கெட் வீழ்த்தினார். பின்னர் ஆடிய டெல்லி அணி, 3 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.