ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் : சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 16 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது ராஜஸ்தான் அணி
Sep 23 2020 9:36AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் லீக் ஆட்டத்தில் 16 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீழ்த்தியது.
சென்னை சூப்பர் கிங்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையிலான லீக் ஆட்டம் சார்ஜாவில் நடைபெற்றது. டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் பந்துவீச்சை தேர்வை செய்தது. அதன்படி, முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் சஞ்சு சாம்சன் ஸ்டீவ் ஸ்மித் ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் 7 விக்கெட் இழப்பிற்கு 216 ரன்களை குவித்தது.
இதையடுத்து 217 ரன்கள் எடுத்தால் வெற்றி என்னும் இமாலய இலக்கை நோக்கி சென்னை சூப்பர் கிங்ஸ் களமிறங்கியது. வாட்சன் 33 ரன்களிலும் முரளி விஜய் 21 ரன்களிலும் சார் கர்ரன் 17 ரன்களிலும் ஆட்டமிழந்தார். மறுமுனையில் அதிரடியாக ஆடிய டு பிளஸ்சிஸ் 37 பந்துகளில் 7 சிக்சர்கள் உள்பட 72 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 200 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதையடுத்து 16 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றி பெற்றது.