பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி : ஜோகோவிச்சை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார் ரபேல் நடால்
Oct 12 2020 10:27AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில், ஸ்பெயின் வீரர் ரஃபேல் நடால் 13-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.
பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில், ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதியாட்டம் பாரீஸ் நகரில் நேற்று நடைபெற்றது. இதில், 12 முறை சாம்பியன் பட்டம் வென்றவரும் தரவரிசையில் 2-வது இடத்தில் இருப்பவருமான ஸ்பெயின் ரஃபேல் நடால், முதலிடத்தில் உள்ள செர்பியாவின் Novak Djokovic-ஐ எதிர்கொண்டார். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில், நடாலின் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் ஜோகோவிச் திணறினார். இதனால், 6-0, 6-2, 7-5 என நேர்செட் கணக்கில் ஜோகோவிச்சை எளிதாக வீழ்த்தி, 13-வது முறையாக நடால் சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார். இந்த வெற்றியின் மூலம் ஒட்டுமொத்தமாக 20 'கிராண்ட்ஸ்லாம்' பட்டங்களை வென்று ரஃபேல் நடால் சாதனை படைத்துள்ளார்.