பிரபல கால்பந்து வீரர் ரொனால்டோவுக்கு கொரோனா தொற்று - தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக போர்ச்சுக்கல் கால்பந்து கூட்‌டமைப்பு தகவல்

Oct 14 2020 10:28AM
எழுத்தின் அளவு: அ + அ -

உலகின் முன்னணி கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

போர்ச்சுக்கல் கால்பந்து அணி கேப்டன் கிறிஸ்டியானோ ரொனால்டோ, கிளப் கால்பந்தில் யுவண்டஸ் அணிக்காக விளையாடுகிறார். தற்போது ஐரோப்பிய அணிகளுக்கு இடையிலான தேசிய லீக் தொடரில் பங்கேற்றார். சமீபத்தில் பிரான்ஸ் அணிக்கு எதிரான போட்டிக்குப் பின்னர் ​ரொனால்டோவுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில், ரொனால்டோவுக்கு எவ்வித அறிகுறியும் இல்லை என்ற போதும், வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். இந்த தகவலை போர்ச்சுக்கல் கால்பந்து கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக, ஸ்வீடனுக்கு எதிரான நேஷன்ஸ் லீக் போட்டிக்கான போர்ச்சுக்கல் அணியில் இருந்து ரொனால்டோ நீக்கப்பட்டுள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00