ஊரடங்கு காலத்தை பயனுள்ளதாக கழிக்கும் சிறார்கள் - இளம் சிறார்களுக்கு இலவசமாக பாக்ஸிங் கற்றுக் கொடுக்கும் இளைஞர்
Oct 18 2020 10:40AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தூத்துக்குடியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், ஊரடங்கு காலத்தை பயனுள்ளதாக கழிக்கும் வகையில் இளம் சிறார்களுக்கு இலவசமாக பாக்ஸிங் கற்றுக் கொடுத்து, அவர்களை மாநில அளவில் சிறந்த வீரர்களாக உருவாக்கியுள்ளார்.
தூத்துக்குடியைச் சேர்ந்த லக்ஷ்மண பெருமாள் என்பவர், பாக்ஸிங்கில் மாநில, தேசிய அளவில் பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார். இந்நிலையில், கொரோனா ஊரடங்கு நேரத்தை பயனுள்ளதாக கழிக்கும் வகையில், இளம் சிறார்களுக்கு இலவசமாக பாக்ஸிங் கற்றுக் கொடுத்து வருகிறார். சுமார் மூன்று மாதகாலம் இவர் சிறுவர்களுக்கு பாக்சிங் கற்றுக் கொடுத்துள்ளதுடன், சென்னையில் நடைபெற்ற போட்டி ஒன்றில் இந்த சிறுவர்களை கலந்துகொள்ளவும் வைத்துள்ளார். இவரிடம் பயிற்சி பெற்ற 12 சிறுவர்களில் ஆறு பேர் தங்கப்பதக்கமும், 6 பேர் வெள்ளிப்பதக்கமும் பெற்று சாதனை படைத்துள்ளனர். இலவசமாக பாக்ஸிங் கற்றுக்கொடுத்த லட்சுமணன பெருமாளுக்கு, பயிற்சி பெற்ற சிறுவர்களும், அவர்களது பெற்றோர்களும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.