மும்பை இந்தியன்ஸ் - பஞ்சாப் அணிகளுக்கிடையேயான ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி : 2-வது சூப்பர் ஓவரில் பஞ்சாப் அணி வெற்றி
Oct 19 2020 10:36AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில், 2-வது சூப்பர் ஓவரில் பஞ்சாப் அணி வெற்றிபெற்றது.
துபாயில் நடைபெற்ற 36-வது ஐ.பி.எல். லீக் போட்டியில், மும்பை, பஞ்சாப் அணிகள் மோதின. இதில் 'டாஸ்' வென்ற மும்பை அணி, முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து,. 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 176 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக அந்த அணியின் டி காக் 53 ரன்கள் எடுத்தார். பஞ்சாப் அணியின் சார்பில் அதிகபட்சமாக முகமது சமி மற்றும் அர்ஷ்தீப் சிங் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
இதையடுத்து 177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில், கே.எல் ராகுல் 77 ரன்கள் எடுத்தார். கடைசி ஓவரில் வெற்றிக்கு 9 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், 8 ரன்கள் மட்டுமே பஞ்சாப் அணி எடுத்தது. இதனால், ஆட்டம் டிரா ஆனது. இதையடுத்து வெற்றியை தீர்மானிக்க சூப்பர் ஓவர் முறை பின்பற்றப்பட்டது. சூப்பர் ஓவரில் முதலில் பேட் செய்த பஞ்சாப் அணி, வெறும் 5 ரன்கள் மட்டுமே எடுத்தது. 6 ரன்கள் வெற்றி என்ற இலக்குடன் பேட் செய்த மும்பை அணியால், 5 ரன்களே எடுக்க முடிந்தது. இதையடுத்து, வெற்றியை தீர்மானிக்க 2-வது முறையாக சூப்பர் ஓவர் முறை கடைபிடிக்கப்பட்டது. இதில், மும்பை அணி 11 ரன்களை சேர்த்தது. பஞ்சாப் அணி 12 ரன் எடுத்து வெற்றி பெற்றது.