திருச்சியில் கொரோனா பரவல் குறித்து விழிப்புணர்வு - தீயணைப்புத் துறை சார்பில் மாரத்தான் போட்டி
Oct 20 2020 4:25PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருச்சியில், கொரோனா பரவல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், தீயணைப்புத் துறை சார்பில் மாரத்தான் போட்டி நடைபெற்றது. திருச்சி கண்டோன்மெண்ட் தீயணைப்புத் துறை சார்பில், பீமநகர், பாரதிதாசன் சாலை, தலைமைத் தபால் நிலையம் வழியாக டிவிஎஸ் டோல்கேட் வரை மாரத்தான் போட்டி நடத்தப்பட்டது. தீயணைப்புத்துறை வீரர்கள், தன்னார்வ இளைஞர்கள் கலந்துகொண்டு, விழிப்புணர்வு பதாகைகளை ஏந்திச் சென்றனர்.