ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் நேற்றைய லீக் ஆட்டத்தில் பெங்களூர் அணி அபார வெற்றி: 8 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தாவை வென்றது
Oct 22 2020 10:28AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் நேற்றைய லீக் ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாத்தில் கொல்கத்தா அணியை பெங்களூர் அணி வென்றது.
துபாயில் நடைபெற்று வரும் 13வது ஐ.பி.எல். போட்டித் தொடரின் 39-வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பேட் செய்தது. பெங்களூர் அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாத கொல்கத்தா அணி வீரர்கள் 14 ரன்கள் எடுப்பதற்குள் 4 விக்கெட்களை இழந்தனர். அணியில் அதிகபட்சமாக கேப்டன் இயன் மார்கன் 30 ரன்கள் எடுத்திருந்தார். 20 ஓவர் முடிவில் கொல்கத்தா அணி 8 விக்கெட்டுகளை இழந்து 84 ரன்கள் மட்டுமே எடுத்தது. பெங்களூர் அணியில் அபாரமாக பந்து வீசிய சிராஜ் 4 ஓவர்கள் வீசி 8 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
85 ரன்கள் என்ற எளிய இலக்குடன் களம் இறங்கிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 13.3 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 85 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 14 புள்ளிகளுடன் பெங்களூரு அணி புள்ளிப் பட்டியலில் 2- ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளது.