ஆஸ்திரேலிய தொடருக்கான டெஸ்ட் போட்டி, ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தொடர்களில், தமிழகத்தைச் சேர்ந்த வருண் சக்ரவர்த்தி, வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.
இந்திய அணி நவம்பர் மாதம் முதல் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் வரை ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதற்கான அணிகளை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.
அதன்படி, டி20 கிரிக்கெட் அணியில், கேப்டன் விராட் கோலி, ஷிகர் தவான், மயாங்க் அகர்வால், கே.எல். ராகுல், மணிஷ் பாண்டே, சஞ்சு சாம்சன், ஜடேஜா, தமிழக வீரர்கள் வருண் சக்ரவர்த்தி, வாஷிங்டன் சுந்தர், சாஹல், பும்ரா, முகமது சிராஜ், நவ்தீப் சைனி, தீபக் சாஹர், ஹர்திக் பாண்ட்யா, ஷ்ரேயாஸ் அய்யர் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.
ஒருநாள் தொடருக்கான அணியில், கேப்டன் விராட் கோலி, ஷிகர் தவான், சுப்மன் கில், கே.எல்.ராகுல், ஷ்ரேயாஸ் அய்யர், மணிஷ் பாண்டே, ஹர்திக் பாண்ட்யா, மயாங்க் அகர்வால், ஜடேஜா, சாஹல், குல்தீப் யாதவ், பும்ரா, முகமது சிராஜ், நவ்தீப் சைனி, ஷர்துல் தாகூர் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.
டெஸ்ட் அணியில், கேப்டன் விராட் கோலி, மயாங்க் அகர்வால், பிரித்வி ஷா, கே.எல்.ராகுல், புஜாரா, ரகானே, ஹனுமா விஹாரி, சுப்மன் கில், சகா, ரிஷப் பண்ட், பும்ரா, முகமது ஷமி, உமேஷ் யாதவ், நவ்தீவ் சைனி, குல்தீப் யாதவ், ஜடேஜா, அஸ்வின், முகமது சிராஜ் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.
மூன்று தொடர்களிலும் ரோகித் சர்மா இடம்பெறவில்லை. இதனால், ஒருநாள் மற்றும் டி20 அணிக்கு கே.எல்.ராகுல் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இதுதவிர கூடுதல் பந்துவீச்சாளர்களாக கம்லேஷ் நாகர்கோடி, கார்த்திக் தியாகி, இஷன் போரெல் மற்றும் தமிழக வீரர் நடராஜன் ஆகியோர் இந்திய அணியுடன் செல்கின்றனர். காயம் காரணமாக ஓய்வில் இருந்த ரோகித் சர்மா மற்றும் இஷாந்த் சர்மாவின் உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.