நாகை மாவட்டம் சீர்காழி அருகே வாள்வீச்சு, சிலம்பம், சுருள்வீச்சு விளையாட்டுக்களை செய்து காண்பித்த சிறுவர்கள்
Oct 27 2020 1:04PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நாகை மாவட்டம் சீர்காழி அருகே, நூற்றுக்கும் மேற்பட்ட சிறுவர் சிறுமிகள் இணைந்து, வாள்வீச்சு, சிலம்பம், சுருள்வீச்சு உள்ளிட்ட தமிழர் வீர விளையாட்டுக்களை செய்து காண்பித்தது, பார்வையாளர்களை பிரமிப்பில் ஆழ்த்தியது.
புளிச்சக்காடு கிராமத்தைச் சேர்ந்த விவசாயி இளைஞர் தினேஷ் என்பவர், தனது ஓய்வு நேரங்களில் கிராமம் கிராமமாக சென்று தமிழர் வீரவிளையட்டு மற்றும் தற்காப்பு கலைகளை இலவசமாக பயிற்றுவித்து வருகிறார். கொரோனா ஊரடங்கள் பள்ளிகள் மூடப்பட்டு வீட்டிலேயே முடங்கிய ஏழை சிறுவர், சிறுமிகளை அந்தந்த கிராமத்திற்கே சென்று தற்காப்புகலைகளை பயிற்றுவித்தார். இவரிடம் பயின்ற மாணவ மாணவிகள், தமிழர் வீரவிளையாட்டுக்களை செய்து காண்பித்தது, பார்வையாளர்களை வியக்க வைத்தது.